வியாழன், 30 ஜூன், 2016


வள்ளுவ வாழ்த்து!!!
உலகத்தை இரண்டடியில் உரைத்தவனே உத்தமனே 
மூலறிந்த நாயகனே போற்றி - செந் 
தமிழுக்குத் தனிச்சிறப்பை தந்தவனே தவத்தவனே 
அமுதவனே அருந்தவனே போற்றி 

தரணியிலே யாவருக்கும் சமத்துவத்தை போதித்த 
பரணியே பாவலனே போற்றி - மனித 
வாழ்விற்கு இலக்கணத்தை வகுத்திட்ட வாலறிவா 
ஏழ்மைக்கும் ஏடளித்தாய் போற்றி 

குறள்வெண்பா கொடையீந்த குறைவில்லா அறிவீந்த 
பரல்வெண்பா சிம்பொனியே போற்றி - கண் 
காணயேங்கும் கருத்தவனே காரீந்த கருணையனே 
அண்டவனே அதிபரனே போற்றி 

பிறப்பொக்கும் எனமுழங்கி சாதிமத இழிவிழுங்கி 
முற்போக்கில் மூத்தவனே போற்றி - முக்காலம் 
கணித்தவனே எழுசீரில் உயர்ந்தவனேத் தமிழ் 
முனியே மூப்பனே போற்றி போற்றி...! 


-------------------நிலாசூரியன். தச்சூர்