திங்கள், 30 ஜனவரி, 2012

!!! நானொரு கேள்விக்குறி !!!

உன் வெப்ப
பார்வைக்காக ஏங்கும் 
ஒரு சிறு 
பனித்துளிதான் நான்....

உன் மார்புக்குள் 
இடம் கேட்கும் 
ஒரு சிறு 
நீர்த்திவளைதான்  நான்...

உன் பாதமாவது 
படாதா என ஏங்கும்
ஒரு அடி 
நிலம்தான் நான்...

உன் புனகையை 
கவர முயலும் 
ஒரு துளி 
தென்றல்தான் நான்...

உன் சங்கீத வார்த்தைகளை 
கேட்கத்துடிக்கும் 
ஒரு மௌன 
வீணைதான் நான்...

உன் சிரிப்பொலியை 
கேட்டு சிலிர்க்கும் 
ஒரு சிறு 
தீப்பொறிதான் நான்...

உன் பதிலுக்காகவே 
காத்து கிடக்கும் 
ஒரு 
கேள்விக்குறிதான் நான்...!!! 
           
           --- நிலாசூரியன் ---
கருமேக காட்டில் 
சிக்கிக் கொண்டு 
அடிக்கடி முகம் 
காட்டுகிறாய் 
வெண்ணிலவே....
என்னவளின் 
கூந்தல்காட்டில் 
சிக்கி இருந்தால் 
உனக்கு தினம் தினம் 
அமாவாசைதான்...!!!

        --- நிலாசூரியன் ---
இசைஞானி 
இளையராஜாவாக 
இருந்தாலும் சரி 

இசைப்புயல் 
எ.ஆர் ரகுமானாக 
இருந்தாலும் சரி 

தேனிசை தென்றல் 
தேவாவாக 
இருந்தாலும் சரி 

என்னவளின் 
கொலுசின் இசையிடம் 
தோற்றுத்தான் போவார்கள்...!!!
                
                        --- நிலாசூரியன் ---


        

!!! சிகரெட் !!!

உன் அப்பா அம்மாவிற்கு 
நீ கொல்லி 
வைக்கும் முன்பு 
உன் பிள்ளைகள் 
உனக்கு கொல்லி 
வைக்கும் முன்பு 
தனக்கு தானே 

கொல்லி வைத்து கொள்வது...!!! 

           --- நிலாசூரியன் ---

!!! ஒரு ஜென்மம் போதாது !!!

பெண்ணே...!
தயவு செய்து - நீ 
என்னை மறந்துவிட்டு 
வேறு ஒருவனை 
மணந்துகொள் 
ஏனென்றால்...
உன்னோடு வாழ 
எனக்கு இந்த 
ஒரு ஜென்மம் 
போதவே போதாது...!!!  

     --- நிலாசூரியன் ---

!!! பாவமன்னிப்பு !!!

ஏசுவே...!
மன அமைதிக்காகவே 
உன் ஆலயத்திற்கு 
வந்தேன் - என் 
மன அமைதியை 
கெடுக்கும் 
அவளுக்கு மட்டும் 
பாவ மன்னிப்பு 
வழங்கிவிடு  !!!

    --- நிலாசூரியன் ---