ஞாயிறு, 27 மே, 2012

!!! நானும் எனது இரவும் !!!


இதமான தென்றலின் தழுவுதலால் 
வாசலில் உள்ள 
வேப்பமர இலைகள் 
சல சலவென 
தங்களது பாஷைகளை 
பரிமாறிகொள்ளும்...

மின்சார கம்பத்தில் அமர்ந்திருக்கும் 
சாமக்குருவி 
இரவின் மௌனத்தை தகர்த்து 
ஈட்டியை பாச்சும் ...

பட்டியில் கட்டியிருக்கும் 
மாடுகள் அசைபோட்டு 
இரவை மெல்லும்...

எங்கேயோ நான்கு ஐந்து 
நரிகள் ஒன்றிணைந்து 
ஊளையிடும் - அதை தொடர்ந்து 
தெருவில் உள்ள 
நாய்கள் அனைத்தும் 
தங்களது 
ஒலிப்பெருக்கியை முடுக்கிவிடும்...

ராப்பசியில் 
ஏதோ ஒரு வீட்டில் 
குழந்தை அழும் 
அதே வேளையில் அந்த 
குழந்தைத்தாயின் 
தாலாட்டு தொடரும்...

சில முதியோர்களின் 
நுரையீரலில் இருந்து 
வெளிப்படும் காற்று 
இருமலோடு 
இரவை குதறி துப்பும்...

சாக்கடையில் வாழும் 
தெருத்தவளை - தான் 
பாடுவதாக என்னி 
சில நேரங்களில் கத்தி கதறி 
இரவை இம்சை செய்யும்...

சுவரேறி குதித்து வரும் பூனைகள் 
சிலரது வீட்டின் 
சட்டி பானைகளை உருட்டி 
உறக்கத்தை கெடுக்கும்...

இரவின் இதயத்தை 
கிழித்துகொண்டு 
அப்பப்போ சில வாகனங்கள் 
சாலையில் செல்லும்...

நான் உருளும்போழுதும் 
புரளும்போழுதும் 
எனது கயிற்றுக்கட்டில் 
இரவோடு பேசும்...

ஊரே உரக்க போதையில் இருக்கும் 
நான் மட்டும் 
உறக்கத்தையே 
உறங்கவைத்துவிட்டு 
இரவை இருளில் தள்ளிவிட்டு 
விழிகளைமூடி 
விழித்துக்கொண்டு இருப்பேன்!
என் 
மனதிற்குள் ஆர்பரிக்கும் 
என் என்னக்கடல் 
என்னுடன் சேர்ந்து 
மௌனமாய் தியானிக்கும் 
நடுநிசி இரவில்...!!!

--- நிலாசூரியன் ---

திங்கள், 30 ஜனவரி, 2012

!!! நானொரு கேள்விக்குறி !!!

உன் வெப்ப
பார்வைக்காக ஏங்கும் 
ஒரு சிறு 
பனித்துளிதான் நான்....

உன் மார்புக்குள் 
இடம் கேட்கும் 
ஒரு சிறு 
நீர்த்திவளைதான்  நான்...

உன் பாதமாவது 
படாதா என ஏங்கும்
ஒரு அடி 
நிலம்தான் நான்...

உன் புனகையை 
கவர முயலும் 
ஒரு துளி 
தென்றல்தான் நான்...

உன் சங்கீத வார்த்தைகளை 
கேட்கத்துடிக்கும் 
ஒரு மௌன 
வீணைதான் நான்...

உன் சிரிப்பொலியை 
கேட்டு சிலிர்க்கும் 
ஒரு சிறு 
தீப்பொறிதான் நான்...

உன் பதிலுக்காகவே 
காத்து கிடக்கும் 
ஒரு 
கேள்விக்குறிதான் நான்...!!! 
           
           --- நிலாசூரியன் ---
கருமேக காட்டில் 
சிக்கிக் கொண்டு 
அடிக்கடி முகம் 
காட்டுகிறாய் 
வெண்ணிலவே....
என்னவளின் 
கூந்தல்காட்டில் 
சிக்கி இருந்தால் 
உனக்கு தினம் தினம் 
அமாவாசைதான்...!!!

        --- நிலாசூரியன் ---
இசைஞானி 
இளையராஜாவாக 
இருந்தாலும் சரி 

இசைப்புயல் 
எ.ஆர் ரகுமானாக 
இருந்தாலும் சரி 

தேனிசை தென்றல் 
தேவாவாக 
இருந்தாலும் சரி 

என்னவளின் 
கொலுசின் இசையிடம் 
தோற்றுத்தான் போவார்கள்...!!!
                
                        --- நிலாசூரியன் ---


        

!!! சிகரெட் !!!

உன் அப்பா அம்மாவிற்கு 
நீ கொல்லி 
வைக்கும் முன்பு 
உன் பிள்ளைகள் 
உனக்கு கொல்லி 
வைக்கும் முன்பு 
தனக்கு தானே 

கொல்லி வைத்து கொள்வது...!!! 

           --- நிலாசூரியன் ---

!!! ஒரு ஜென்மம் போதாது !!!

பெண்ணே...!
தயவு செய்து - நீ 
என்னை மறந்துவிட்டு 
வேறு ஒருவனை 
மணந்துகொள் 
ஏனென்றால்...
உன்னோடு வாழ 
எனக்கு இந்த 
ஒரு ஜென்மம் 
போதவே போதாது...!!!  

     --- நிலாசூரியன் ---

!!! பாவமன்னிப்பு !!!

ஏசுவே...!
மன அமைதிக்காகவே 
உன் ஆலயத்திற்கு 
வந்தேன் - என் 
மன அமைதியை 
கெடுக்கும் 
அவளுக்கு மட்டும் 
பாவ மன்னிப்பு 
வழங்கிவிடு  !!!

    --- நிலாசூரியன் ---