திங்கள், 30 ஜனவரி, 2012

!!! நானொரு கேள்விக்குறி !!!

உன் வெப்ப
பார்வைக்காக ஏங்கும் 
ஒரு சிறு 
பனித்துளிதான் நான்....

உன் மார்புக்குள் 
இடம் கேட்கும் 
ஒரு சிறு 
நீர்த்திவளைதான்  நான்...

உன் பாதமாவது 
படாதா என ஏங்கும்
ஒரு அடி 
நிலம்தான் நான்...

உன் புனகையை 
கவர முயலும் 
ஒரு துளி 
தென்றல்தான் நான்...

உன் சங்கீத வார்த்தைகளை 
கேட்கத்துடிக்கும் 
ஒரு மௌன 
வீணைதான் நான்...

உன் சிரிப்பொலியை 
கேட்டு சிலிர்க்கும் 
ஒரு சிறு 
தீப்பொறிதான் நான்...

உன் பதிலுக்காகவே 
காத்து கிடக்கும் 
ஒரு 
கேள்விக்குறிதான் நான்...!!! 
           
           --- நிலாசூரியன் ---

1 கருத்து: